என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

அறியாமை...

என்னை விட்டு என்னை விடுவிக்க முயற்சிக்கிறேன்..

அது முடியாத பொழுதும் என்னை நானே பயிற்சிக்கிறேன்...

ஊணுக்கும் உயிருக்கும் உறவில்லை என்பதை உணர்கிறேன்..

உப்பில்லாத உறவுகளுக்கு உணர்ச்சியற்று உருகுகிறேன்..

முடிவில்லாத பயணத்தில் முதல் நிலையில் பயணிக்கிறேன்..

அவிழா முடிச்சுகளோடு மரணத்தை நோக்கி நகர்கிறேன்..

வாழ்வுதான் முடிவா ! முடிவுதான் வாழ்வா ! அறியாமலே தவிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக