என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

எடுத்து விடு தோழனே...

எடுத்து விடு தோழனே
கையில் ஒரு ஆயுதம்....
சித்தம் கலங்கி 
செத்து பிழைப்பதை விட 
கொலைத் தொழில் பழகி விடு...
அடங்கி தவித்து 
அஞ்சி நின்றது போதும்
அச்சம் உனக்கான குணமல்ல...
தோழா நீயும் 
நித்தம் சுற்றம் பாரடா...
இழிவுகள் உன்னை சுற்றி 
விழிகள் திறந்து காணடா...
தண்ணீரும் தடைப் படும் 
அணைகளும் உடைப் படும் 
சொந்தங்களோ குருதிக் கலரியில்..
எத்துனை அவலங்கள் கண்டிடு
உந்தன் பேராற்றல் கொண்டே வென்றிடு....
பெண்பிள்ளைகளை கண்ணென்று காத்திடு...
ஆதலால் தோழா 
ஆயுதம் ஒன்றை தாங்கிடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக