என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

எரிமலை சிதறிடும் ....



எனை என்னவோ நினைத்தாய் 
சிறு பொடியனென்று உரைத்தாய் 
அஞ்சிடுவேன் , கூத்தாடி 
கெஞ்சிடுவென் என சிந்தித்தாயோ...
ஆல் போல முளைத்திடுவேன் 
வாழையாய் தளைத்திடுவேன் 
விதையாய் விழுந்திடுவேன்....நான் 
இயற்கையுடன் இயைந்து போனவன்
சீற்றம் கொள்வேன் 
சூழ்நிலையில் மாற்றம் கொள்வேன்....
நிமிர்ந்திட வானம் வரையளவு 
துணிந்திட ஆழம் கடலளவு...
அஞ்சி பிழைத்திட அற்பன் 
நானென நினைவு கொண்டாயோ !!!
அன்றே எரிமலை சிதறிடும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக