என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மரணத்தை நேசிக்கிறேன்...



ஆழி குளமாகி ஏரி தரிசாகி 
நீரின்றி அமையலாம்  உலகு
அன்றே வீதியெங்கும் பூக்கோலம் 
நாடெங்கும் நர்த்தனங்கள் 
திக்கெட்டிலும் திகழ்ந்திடும் அமைதி....
இருக்கும் இடத்தில் 
இல்லையென்ற விதியை 
கொண்டாடும் உலகம்...
உள்ளமதில் உள்ளதை கூற 
கபடமதை கலந்துரைக்கும்....
பற்றோடு பற்று வைக்க 
ஏமாற்றத்தை பரிசளிக்கும்...
நேசித்து வாழ உயிரற்று போனதே மனிதம்,,,
இனி நேசித்து வாழ நிலையில்லை 
ஆகவே நிலையான 
மரணத்தை மட்டும் நேசிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக