என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 27 பிப்ரவரி, 2013

இந்தியனே கேள்....

எங்களில் சாதியுண்டு 
சண்டையுண்டு 
மதமுண்டு 
மோதலுமுண்டு 
பிரிவினைகள் பலவுண்டு ,
நிச்சயம் சொல்கிறேன் கேள் இந்தியனே !
எங்கள் பிரிவுகள் பாதியிலே தவிர 
ஆதியிலே அல்ல ,,,
தமிழச்சியின் தவப்புதல்வர்கள் 
நாங்கள் தமிழர்கள்....
துண்டாடிக்  கொண்டாடி விடலாம் 
எண்ணிவிடாதே ..
பாரதத்தின் பாதம் நாங்கள் ...
நாங்கள் சற்றே அசைந்தால் 
பாரதம் கவிழும், தேசம் உடையும்...
நிலைகுலைந்து போகும் முன் யோசி...
எங்கள் ஈழத்தில் தமிழ் தேசியக்கீதம் வாசி....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக