''வாழ்ந்தாலும் தமிழுக்கும்
தமிழர்க்கும் வாழ்வேன்!
தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும்
தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன்
உடலையிருகூறாய்ப் போழ்ந்தாலும்
சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும்
அணுக்களெல்லா மதுவே!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக