என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 ஆகஸ்ட், 2011

உணர்வாளன்

''வாழ்ந்தாலும் தமிழுக்கும் 

தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும்
தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன்
உடலையிருகூறாய்ப் போழ்ந்தாலும்
சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும்
அணுக்களெல்லா மதுவே!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக