என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 ஆகஸ்ட், 2011

வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை .




மரணத்தை கண்டு எல்லோருக்கும் பயம்.

எல்லா பயங்களும் மரணத்தில் முடிகின்றன .

ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை .

நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி 

அப்பொழுதைய அழுகை நமக்காகவே !!!!

பிரார்த்தனை கோவில்கள் மதங்கள் அனைத்துமே .

மரணம் மட்டும் இல்லையெனில் மறைந்து போகும் .

மரணத்தை புரிந்தவன் வென்றவனாகிறான்......

வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை .

பயம் கொள்ளாதவனுக்கு மரணமில்லை ."



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக