என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 ஆகஸ்ட், 2011

சாதியை ஒழிக்க வேண்டும் கத்துபவர்களே

சாதியை ஒழிக்க வேண்டும் கத்துபவர்களே !! உரக்க கத்துங்கள் இலங்கை நோக்கி !!
தன்மானம் உள்ளவன் தமிழன் என்று பிதற்றுபவர்களே !! தமிழன் பிடரியில் கோடாலி வைத்திருப்பதை கவனியுங்கள் !!
பகுத்தறிவு பேசும் அறிவாளிகளே !! உங்கள் அண்ணாகயிறு அவிழ்ந்து போவதை பிடியுங்கள் !!
ஆன்லைனில் மட்டும் வீரம் பேசும் வீர தமிழர்களே !! உன் நீர்த்து போன வீரத்தை சிங்களனிடம் காண்பியுங்கள் !!

தன் மானம் உள்ள தமிழர்களே !!! தமிழச்சிகளே !! வெட்டி விவாதத்தை புறக்கணியுங்கள் !!
தமிழினம் போல ஒரு இனம் இல்லை !! தமிழன் போல ஒரு தரணியில் வீரன் இல்லை நிருபியுங்கள் !!
சாதி ,மதம் ,கடந்து தமிழனை தலை நிமிர செய்குவோம் !! இதில் பிரிவினை செய்யும் புல்லுருவிகளை வேரோடு அழிப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக