என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 ஆகஸ்ட், 2011

தமிழன் வீரம்

வீரம் எங்கள் குல தொழிலடா !

போரென்றால் முன் நிற்கும் இனமடா !

பார்த்தாலே வீரம் பிறக்குமடா !

பார்வையில் பல அர்த்தம் இருக்குமடா !

பதுங்கி பின் பாயுமடா !

அண்டியோற்கு உயிரை கொடுக்குமடா !

எதிர்த்தோரின் உயிரை எடுக்குமடா !

குணத்தில் புலிகள் நிகரடா !

கூடி நின்றால் புரட்சி வெடிக்குமடா !

குள்ளநரி கூட்டத்தை ஒழிக்குமடா !

நாம் ஒன்று சேர்ந்தால் பூகம்பம்தானடா !

நம் இனத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதடா !

1 கருத்து: