என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 31 ஜனவரி, 2013

கை விடேன்...


கொண்டக் காரியம் கை விடேன்...
ஆழச் சிந்தனை செய்தே 
கைக்  கொண்டேன்,,,இனி 
விட்டு விட இயலாது...
கரமிரண்டை முன்னிறுத்தி 
தன்னிலை பரிசோதனை 
செய்யும் தருணம் இதுவே...
எனை விளங்கிக் கொள்ளும் 
பொறுமை என்னிடம் இல்லை....
என்னை விளக்கிச் சொல்ல நேரமும் இல்லை...
ஏனெனில் 
வெல்லுவதும் வீழ்வதும் எம் கையில்...

2 கருத்துகள்: