என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மறதி...



மனித மூளைக்கு உரித்தான 
முதல் நிலை..
தீதினை முற்பாதி 
நன்றினை பிற்பாதியிலும் 
நிகழச் செய்யும்..
மறதியில் 
கடந்து போனதும் 
மறைந்து போனதும் 
உருச் செய்யும் சுவடுகள் உருக்குலையும்....
இதில் 
செயல்களும் 
மரணங்களும் உட்கொள்ளும்...
தீர்ந்து போகும் மக்கள் மனதில்
நன்றிகளும் தீரா வடுக்களும்...
இதய சுற்றிகரிப்பில் முதலுதவி செய்யும்...
இதமான இணைவிற்கும் 
வஞ்சமில்லா வாழ்வுக்கும்..
மறதி மகத்துவமே !!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக