என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 2 அக்டோபர், 2012

நண்பா....


நலமென்று உரைப்பேன் உன் உறவை...
உறவால் கிடைத்த இன்பத்திலும் 
உன் உறவால் கிட்டிய பேரின்பம் பெரிதென்பேன்...
ஆணென்று பெண்ணென்று இல்லை பேதம்...
வாழும் உயிர்களுக்கு நட்பு மட்டுமே வேதம்...
நட்பு...
சில்லென்று வீசும் 
சுள்ளென்று பேசும் 
சிறு தவறிலும் 
உடையாமல் நட்பு கொள்ளடா நண்பா....
நீ இல்லாமல் இயங்காது சூழல்...
உள்ளொன்று வைத்து புறமொன்று 
நினைத்தால் நிலைக்காது,,
அதில் தழைக்காது அழகிய நட்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக