பற்றிய தீ ...
தீராமல் என்றும் நெஞ்சினில்
எம் இனம் கண்ட தீரா வஞ்சம்
எவ்வகையில் தாங்கும் நெஞ்சம்....
கொண்ட பகையில்
நட்பின் கலப்படம்....
கண்ட உறவில்
சாவின் நிழற்படம்...
அணையுமோ
நெஞ்சத்தின் பிழம்பு...
அணைகட்டி நிற்கும் சலனங்கள்
முளைவிட்டு போகும் ஆசைகள்,,,
நிலையற்று போகும் பொய்கள்...
இத்தனையும் நெஞ்சினில் தீயாய்...
அணைவது சாத்தியமா..
எழுதப்படாத தீர்மானங்கள்
எழுதிவைத்த உணர்வற்ற உரிமைகள்..
தகதகக்கும் தனிவற்ற கொள்கைகள்...
நீர் கொண்டு அணைத்திட இயலுமோ...
செந்நீர் காணாமல் அணைந்திடுமோ..
சிதைக்கு வைத்த தீயே தீயை அணைத்திடும்...
அதுவரை நெஞ்சினில் இருந்திடும்...அணையா தீ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக