எங்கும் உணர்வின் விளைச்சல்
எம் தமிழ் நிலத்தில்...
எம் நிலத்தில் நீர் வற்றிய போதும்
எம்மின்
உணர்வுகள் வற்றியதில்லையே...
ஆதி சொந்தங்கள்
அனாதையான அந்நேரம்
உணர்வுகள் தளிர்க்கும்...
ஆழியில் சொந்தங்கள்
குருவிகளாக்கும் தருணம் செழிக்கும்...
அணைகள்
அடைத்தாலும் உடைத்தாலும்
சீர்கொண்டு உணர்வு தழைக்கும்...
எம் நில உணர்வுகள் போல
பிரபஞ்சத்தில் எதுவும் பெரிதில்லை...
ஆயினும்
முற்றிய எம் உணர்வு பயிரை..
பசிக்கு உணவாய் ,
பிணிக்கு ஔடதமாய்
எம்தேசம் செழிக்க இல்லாமல்....
தான்தோன்றியாய் எம்முணர்வை...
விற்க வியாபாரிகள் மட்டுமே இங்கு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக