மீளா துயரங்கள் என்னில்
கொண்ட போதும்
அடுக்கடுக்காய் அவமானங்கள்
அலங்கரித்த நிலையிலும்
கலங்குமா எனது சிந்தை..
சிறுநரிகளின் தந்திரத்தால்
சிந்தனைகள் சிக்கனம்
கொள்ளும்..
மதிகொண்டு வென்றிட
நினைத்தால்
சூழ்நிலைகள்
வெற்றிடம் கொள்ளும்..
அரிவை தந்த ஆனந்தமும்
ஆளுமை கொள்ளும்...
நிதி நிலைமை
நிலை மாற்றம் செய்யும்...
களிப்பும் கலக்கமும்....
எத்தனையோ
இதில் சிந்தையை
கலங்க செய்தால்
என்னவாகுமோ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக