என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 18 அக்டோபர், 2012

கலங்குமா சிந்தை,,,



மீளா துயரங்கள் என்னில் 
கொண்ட போதும்
அடுக்கடுக்காய் அவமானங்கள் 
அலங்கரித்த நிலையிலும் 
கலங்குமா எனது சிந்தை..

சிறுநரிகளின் தந்திரத்தால் 
சிந்தனைகள் சிக்கனம் 
கொள்ளும்..
மதிகொண்டு வென்றிட 
நினைத்தால் 
சூழ்நிலைகள் 
வெற்றிடம் கொள்ளும்..
அரிவை தந்த ஆனந்தமும் 
ஆளுமை கொள்ளும்...
நிதி நிலைமை 
நிலை மாற்றம் செய்யும்...
களிப்பும் கலக்கமும்....
எத்தனையோ 
இதில் சிந்தையை 
கலங்க செய்தால் 
என்னவாகுமோ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக