என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 26 அக்டோபர், 2012

நம்பிக்கை



புவி ஈர்ப்பு விசைக்கும் 
நம்பிக்கைக்கும் 
இடைக்கொண்டது  
நூலிடை அளவே...
இல்லாதோர்க்கு கண்ட 
மாந்தரெல்லாம் பகையே,,
கொண்டவர்க்கு வரமே வாழ்க்கையாகும்...
தாளிட்ட கதவுகள்...
இடைமறிக்கும் வேலிகள் ....
அளவிட்ட தொகைகள்...
இத்தனைக்கும் அவசியம் 
அவசியமற்று தழைக்கும் மானுடம்...
நம்பிக்கை
இல்லா வாழ்வு தன்னை அழிக்க 
ஆயுதம் வீசும் நிகழ்வாகும்...
நம்பி வாழ நம்பிக்கையிருந்தும் 
நம்பிக்கை கொண்ட வாழ்க்கை 
எம்மில்  இல்லை என்பதே நிதர்சனம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக