என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

மனித நேயம்

அன்பைக்  கடந்த ஆண்டவன் இல்லை 
பண்பை வென்ற பக்தியும் இல்லை 
மனித நேயத்தை கடந்த மனித வாழ்க்கையும் இல்லை 
இப்பூவுலகில் நாம் வாழும் சின்ன இடைவெளியில் 
அன்பை விதைத்து ஆனந்தத்தை அறுவடை செய்வோம் 
பண்பை பகிர்ந்து கொண்டு பாசத்தை வளர்ப்போம் 
மனித நேயத்தை வளர்த்து மகத்தான சமுதாயம் படைப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக