என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அய்யாவின் நூற்றிநான்காவது அவதார திருவிழா..

அய்யாவின் நூற்றிநான்காவது அவதார திருவிழாவிற்கு இந்த சிறுவனின்  சமர்ப்பணம்...

உதயமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அற்புத மனித சூரியனே !

அடங்கா வேங்கை கூட்டத்தை அன்பால் அடக்கி போன மனித தெய்வமே !

அழுதாலும் தொழுதாலும் இனி கிடைக்காது உன் போல் அரிய பொக்கிசமே !

நின் பாதம் மட்டுமல்ல ! நீ உதித்த திசை நோக்கி வணங்கி தொழுவோமே !

உன்னை கண்டு வியந்து போனான் வங்கத்து மைந்தனே !

நீ சுற்றிய சிலம்பில் சிதைந்து போனது சிறுநரி கூட்டமே !

தேசம் எனது சுவாசம் எனதுரைத்த எம் தமிழகம் கண்ட தங்கமே !

விவேகமுள்ள உனது வீரத்திற்கு நிகரில்லை காட்டு சிங்கமே !

நீ இன்று  இருந்திருந்தால் பெற்றுருப்போம் தனி ஈழமே !

அய்யா நின் பொறுமைக்கு இணையில்லையே கடல் ஆழமே !

தீண்டாமைக்கு முதன் முதலில் இரும்புக்கரம் தொடுத்த மனித நேய மாந்தனே !

தமிழனுக்கும் வீரம் ! தன்மானம் உண்டு !என  உன்னை கண்டு உணர்ந்தான் வெள்ளையனே !

அறம் காத்து ! வீரம் விளைத்து தேசியம் காத்த செம்மலே !

உன்னை நேரில் கண்டிருந்தால் எங்களுக்கு கிடைத்திருக்கும் இப்பிறவி பாக்கியமே !
நீ விட்டு போன பணியை தவறாமல் செய்து முடிப்போம் !!!! "" இது உன் மேல் சத்தியமே""


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக