என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

உணர்வு கொண்டால் மார் தட்டுங்கள்..

கொல்லைதன்னில் கொத்தாய் கொலை விழ..
திண்ணைதன்னில் முத்தாய் முறுவலித்தாய்..
திண்ணைதன்னிலும் திடீரென தீ பிடிக்க..
உள் முற்றம்தன்னில் குடி புகுந்தாய்...
இனி முற்றத்திலும் இடி விழும்..
எங்கு செல்வாய் தமிழா....................

மேற்கூறியது புரியாவிட்டால் புரியும் -
தமிழக வரைபடம் கண்டால் தெரியும்..

செல்லும் தடமெல்லாம் தடைகள்..
இருக்கும் இடமெல்லாம் இடர்கள்..
புகையூந்து கூட புறம் தள்ளி செல்கிறது..
தண்ணீர் மட்டுமல்ல கண்ணீர் கூட வற்றி போகும்...
நாளைய இளந்தமிழன் சிந்த கூடும் செந்நீர்..
தமிழன் வரல்+ஆறு கூட வற்றி போகும்..
இனமொன்று இருந்தது கூட இல்லாமல் சாகும்..
இது நடவாமல் இருக்க கூடுவோமே இனமான சாதி..
சமர் செய்து ஒழிப்போமே எதிரிகளை பாதி..
கதர் 'கை' காரனை  மிதித்தால் போய் விடுமே மீதி..
வந்தாரையும் வாழ வைப்போம்..
வழி மறிப்போரை வலுவிழக்க செய்வோம் - அதர்க்கு
முன்னதாய் தேவை இன ஒற்றுமை..
களையெடுப்போம் உள்ளுள்ள வேற்றுமை..
உணர்வு கொண்டால் மார் தட்டுங்கள்..
என்  இனமென்று தலை நிமிருங்கள்...

1 கருத்து:

  1. உணர்வு கொண்டால் மார் தட்டுங்கள்..
    என் இனமென்று தலை நிமிருங்கள்...

    அருமை தோழரே ... சினிமா தமிழனுக்கு புரிந்தால் சரி

    பதிலளிநீக்கு