என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 4 ஏப்ரல், 2012

நான்..

நான்..
இது அகந்தையில்
உரைத்த சொல் அல்ல..
என்னிலை விளக்க
அறியாமையில் உரைத்தது...
தமிழன் என்று தலை
நிமிர்ந்திட ..எம்மினம் என்று
மார் தட்டிட ..
உணர்ச்சியின் உச்சத்தில்
உருக்குலைந்தவன்..
பற்றாளன் என்ற போர்வையில்
பாசாங்கு செய்யும் எண்ணமில்லை,,,
அகிலம் அறிய பிறர் குறை
சுட்டிக் காட்ட விருப்பமில்லை...
தன்னில் மாற்றம் கொண்டே
மாற்றத்திற்கான வழி தெரிந்தவன்,,,,
தலை தூக்கி நின்றவனை எல்லாம்
தலைவன் என்று ஏற்க மனமில்லாதவன்.....
ஒருவனே தேவன் ஒருவனே தலைவன்
என்ற நேர் கொள்கை உடையவன்...
பேச்சில் மட்டும் வீரம் காட்ட
துணிவில்லாதவன்...
நூறோடு சேர்த்த நூற்றிஒன்றாய்
வாழ விருப்பமில்லை...
தனிசிந்தனை உள்ளவன் என்று தனித்து
வாழ விரும்பவில்லை...
தனிப்புரட்சி செய்யும் எண்ணமில்லை...
ஊருக்கு ஊரு செய்யும் எதுவும்
புரட்சியில் சேராது என அறிந்தவன்....
எத்தனை துன்பமிருந்தாலும்
எம் இனத்திற்காக தூக்கிய கரத்தை
நிலை மாற்ற திட்டமில்லை.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக