என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 23 ஏப்ரல், 2012

மழையே...

கார்முகில் திரண்டு
ஆகாயத்தில் அருவி
உதிரி பூக்களாய் உதிர்ந்து
மண்ணில் குளிர் செய்யும் மழையே...
சாரலாய் சந்தோசம் !!
பெருந்தூரலாய் பேரின்பம் !!
குறுமழையாய் குறும்பு செய்து....
அடைமழையாய் பணி மறித்து....
காற்றை  துணை கொண்டு...
புயலை கை கொண்டு
அதீத அச்சம் விளைவிக்கும் மழையே...
அன்பாக அரவணைத்து
அனைத்தையும் அள்ளி செல்லும்
உன்னை கண்டவுடன்
உவகை கொள்ளுதே உழவர் மனம்....
உதறல் கொள்ளுதே உச்சிதன்னில்...
மழையே..
பருவத்தில் பதறாமல் வந்து செல்
தரிசெல்லாம் தழைக்கும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக