என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 21 ஏப்ரல், 2012

இரட்டை கிளவி


செய்வதறியா நின்ற பொழுதெல்லாம்
துணை நின்றீர்களே !!
துவண்ட போதெல்லாம்
தூக்கி சென்றீர்களே !!
அஞ்சி வெம்பிய காலத்தில்
அச்சம் போக்கி அரவணைத்து கொண்டீர்களே !!
நீவிர் இருவரும் இரட்டை பிறவிகளா !!
இலக்கணத்தில் இரட்டை கிளவிகளா !!
நீவிருவரும் என்னை நீங்கி சென்றால்
நான் உயிரற்று போவேனே !!
ஒருவர் இல்லாவிடிலும்
பொருளற்று போவேனே !!
நீவிர் இணைந்தால் இடர்கள் களையும்...
பக்கமிருந்தால் தோல்வி எமை தழுவாது...
வெற்றி என்றும் நீங்காது.....
இணைந்தே எனை ஆளும்
"தன்னம்பிக்கை" "துணிச்சல்"
நீங்கள் உள்ளவரை எமை எவரும்
அசைத்திட இயலாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக