என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

என் தம்பி தங்கைகளே !!



நாடொன்று
இல்லையென வருந்தாதே !!
அது நம்
தாத்தன் காலத்து நிலவு
அப்பன் காலத்து கனவு
எங்கள் காலத்து இழவு
உங்கள் காலத்தில் விடிவு....
நம்பி நடை போடு
'தம்பி' இருக்கிறான்...
வெம்பி வருந்தாதே .....
என் தம்பி தங்கைகளே !!
உன் இரு கையை
தமிழுக்காக தூக்கு..
இல்லாவிடில் மாறிவிடும்
இலக்கு.....
அரசியல் சூழ்ச்சிகளுக்கு
உணர்ச்சியை உணவிடாதே...
விதியை மீறி விடுமுறையை
கொண்டாடுவோம் தமிழ் தேசியத்தில்...
அதுவரை அறிவாயுதம் கொண்டு போராடுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக