என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 7 ஏப்ரல், 2012

தனிமை

ஊமையின் குரல் உரக்கும்...
உளவியல் உண்மைகள்
உயிர் பெற்று உலவும்..
மனசாட்சியின் மறுபக்கத்தை
புரட்டி புன்னகைக்கும்..
இனிமையான நினைவு
நிலாவில் ஒளிவீச
நடவாத கற்பனைகள் அரங்கேறும்.....
சிந்தனைகள் நெருக்கடியில்
சிக்கி சிதறும்,,,
சுயத்தை உணர்விக்க
சிரத்தின் உச்சியில்
சிம்மமாய் கர்சிக்கும்....
சிந்தாந்தங்கள் சில நிமிடங்களில்
சிறுநூலாய்  சுருண்டு போகும்..
காரிகையாள் தந்த இன்பமும் துன்பமும்
மாறுதலாய் சிந்தையை சிலிர்க்கும்..
ஏந்தி கொண்ட முகமுடிகள்
அகன்று அசலை அறிவிக்கும்...
ஞானிகளையும் மகான்களையும்
தோற்றுவித்து மகிழும்..
தனிமை
இனிமையும்  வெறுமையும்
ஒரு சேர உருவாகும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக