என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 5 ஏப்ரல், 2012

நான்தான்........

விடையளித்து வினா கேட்பேன்,,
வீழ்ந்த பின்னே கை கொடுப்பேன்...
தோல்வியளித்து துவள வைப்பேன்...
பின் வெற்றியளித்து வியக்க வைப்பேன்..
விபரீதத்தின் விளிம்பை எட்ட வைப்பேன்...
எட்டிய பின் ஏணி கொண்டு இறக்கி வைப்பேன்..
என்னை சந்திக்காமல் சென்றால் சரிவு ..
சந்தித்து சென்றால் என்றும் உயர்வு...
என்னை யார் என்று கேட்டால் பலவீனம்....
யார் என்று உணர்ந்தால் மூலதனம்...
சந்தித்தோர் சட்டென்று சொல்வர்
நான்தான் "அனுபவம்" என்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக