என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தமிழ் தேசிய வாழ்த்துக்கள்...

வந்தாரை வாழ வைத்து வலுவிழந்த போதிலும்...
விட்டு கொடுத்து வீணாக போன பொழுதிலும்...
இல்லை இதற்கு "நிகரென" தனித்து வாழ்ந்து
எங்கும் பளபளக்கும் ஒளியோடு ஒளிர்ந்து கொண்டிருக்கும்..
என் தாய் தமிழ் மொழியே !!!!.


இணைந்து வாழும் எம்மினமே..!!!!!!
சித்திரையில் தொடங்கினாயோ !!


தையினிலே தொடங்கினாயோ !!
உன் தொடக்கத்தை .....
அதுவல்ல சங்கதி...எத்திக்கு சென்றாலும் நீயே எம் கதி.....
உன்னிலே உள்ளது எங்கள் மூச்சு !!
உன் தொடக்கத்தில் செம்மையாகும் எம் வாழ்வு..
அண்டம் அதிர உரைத்திடுவோம்
எம்மினமே உயிரென்று...
தமிழ் பேசும் எந்நாட்டவர்க்கும் எனது தமிழ் தேசிய வாழ்த்துக்கள்....


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக