என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பெண்ணினம்...


உறவுகளை உற்பத்தி செய்து
உலகை கண்ணிமையில் கொண்டு
வாழும் பெண்ணினமே !!
உன்னை வாழ்த்துரைக்க
சொல் தேடி
விழி மூடி
வழி தேடி
ஆழ்மனதை அலைக்கழித்து
உள்மனதில் உருவெடுத்தது
உன்னை பற்றி...

ஆவதற்கும் முடிவதற்கும்
முற்றிலும் நீயே உருவம்...
உருவத்தில் மென்மையாகி
வடிவத்தில் தன்மையாகி..
குணத்தில் பெண்மையாகி..
வரைமுறைகளுக்குள் முடிவாகி .....
தன்னுள் அனைத்தையும் அடக்கிய
பெண்ணினமே உனை போற்றுகிறேன்......

பேதையாய் உவகை தந்து

பெதும்பையாய் பெருமையடைந்து
மங்கையென மாற்றம் கொண்டு
மடந்தையில் உலகை கற்று
அரிவையில் அகிலம் போற்ற
தெரிவையில் குலம் செழிக்க
என்றென்றும் பேரிளம்பெண்ணாய்
எம்மில் நிலைத்து வாழும் பெண்ணினமே !!
உன்னை வணங்குகிறேன்.....

போற்றுவதால் புரிந்துக்கொள்

வணங்குவதால் உன்நிலையில் மாற்றம்கொள்....
மறவாது நினைவுக்கொள் உன் பெருமை
யை.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக