உதிரம் ஒழுக
உயிர் கொடுத்து
உயிர்பித்த தேசப்பற்று....
இன்று
மண்டியிட்டு போனது
மட்டையாட்டத்தில் !
உயிரை பணையம்
வைத்து மானம் காத்த
வீரன் எங்கே....!
பணையம் வைத்து
மானத்தை வாங்கிய
வீரன் எங்கே ...!
அயல்நாட்டு மொழியில்
அண்டிபோன பற்று !!
சுண்டிய ரத்தத்தில்
சுருண்டு போனது...
அன்னை மொழியில் பிள்ளை
பேசினால் இழுக்கென்று என்னும்
மூடா!!
உணர்வாயா வாடகை தாயின்..
தரமென்ன !!
கூத்தாடி கையில் காத்தாடி போல
தேசம் காற்றில் பறப்பதென்ன.....
இன்னும் கூற நினைவில் பல
இருந்தாலும் மனம் பதைப்பதென்ன...
இன்னும் கூற நினைவில் பல
இருந்தாலும் மனம் பதைப்பதென்ன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக