என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 3 மே, 2012

உழைப்பாளி

உழைத்து உழைத்து
ஓடாய் போனவனும்
ஓய்வெடுக்க உலகம் கொடுக்கும்
ஒரு நாள் விடுப்பு...

முதலாளிகளின் நிமிர்ந்த
நடையின் பின்னிருக்கும்
முதுகெலும்புதான்-இந்த
உழைப்பாளி ..

கால் வயிற்று கஞ்சிக்கு
காலமெல்லாம் போராட்டம்-இவன்
இல்லையென்றால்
காணி நிலமெல்லாம் நின்று போகும் ஏரோட்டம்,,,

அரிவாளும் சுத்தியலும்
ஏந்திய பொதுவுடைமை வாதியவன்...
நல்ல
பொறுப்புள்ள மனிதனவன்...

கூலிக்கு மாரடிக்கும்
கூட்டமாகும்..
கூடி நின்னுட்டா
நாடெல்லாம் வாட்டமாகும்...

உழைக்கும் வர்க்கம்...இருக்கும்வரை
நம் வாழ்வு சொர்க்கம் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக