உணர்ச்சிகளில்
உருவம் கொண்டது...
உணர்வுகளுக்கு தலைமை வகித்து
உயிர்களை உயிர்ப்புற செய்யும்..
நொறுங்கிய கண்ணாடி துகளிலும்
அன்பு பிம்பமாய் ஒளிரும்
அன்பென்னும் சொல்லில்
எரிமலை கூட உறைநிலை ஆகும்
அஞ்சா அரிமாவும் அரவணைப்பில்
அசைவற்று அசை போடும்...
அலைபாயும் அடிமனத்தின் ஏக்கத்தை
அமையுற செய்யும்..
அன்பை அடைக்கும் தாழில்லை..
அன்பால் தாழிட்டாலும்
உடைப்பாரில்லை...
எத்தனை துன்பமும் தீயில் பட்ட
துளிநீர் போல காணமல் போகுமே...
அறிவில் பெரியவனும் சிறியவனும்
அன்பிற்கு வேறில்லையே .....
சுற்றித்திரியும் மனித பறவைகளுக்கு
வேடந்தாங்கல் அன்புதானே...
உருவம் கொண்டது...
உணர்வுகளுக்கு தலைமை வகித்து
உயிர்களை உயிர்ப்புற செய்யும்..
நொறுங்கிய கண்ணாடி துகளிலும்
அன்பு பிம்பமாய் ஒளிரும்
அன்பென்னும் சொல்லில்
எரிமலை கூட உறைநிலை ஆகும்
அஞ்சா அரிமாவும் அரவணைப்பில்
அசைவற்று அசை போடும்...
அலைபாயும் அடிமனத்தின் ஏக்கத்தை
அமையுற செய்யும்..
அன்பை அடைக்கும் தாழில்லை..
அன்பால் தாழிட்டாலும்
உடைப்பாரில்லை...
எத்தனை துன்பமும் தீயில் பட்ட
துளிநீர் போல காணமல் போகுமே...
அறிவில் பெரியவனும் சிறியவனும்
அன்பிற்கு வேறில்லையே .....
சுற்றித்திரியும் மனித பறவைகளுக்கு
வேடந்தாங்கல் அன்புதானே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக