தவழ்ந்த மண்ணில்
தடம் மாறி போகும் தமிழா ...
பிறழாமல் நீயும்
தடம் மாறி போகும்
வழி தவறென்று அறிவாயோ...
இனாம்கள் இடரென்று தெரிவாயோ...
இங்கிதம் இல்லாமல் இசைவாயோ...
இம்சைகளுடன் இருக வாழ்வாயோ...
காரணங்கள் உணராமல் சாவாயோ...
உண்மைகளும் உரைக்காமல்....
தடம் மாறி போகும் தமிழா ...
பிறழாமல் நீயும்
தடம் மாறி போகும்
வழி தவறென்று அறிவாயோ...
இனாம்கள் இடரென்று தெரிவாயோ...
இங்கிதம் இல்லாமல் இசைவாயோ...
இம்சைகளுடன் இருக வாழ்வாயோ...
காரணங்கள் உணராமல் சாவாயோ...
உண்மைகளும் உரைக்காமல்....
உரிமைகளும் கொணராமல்..
உயிர் விட்டு போகலாமா...
இருந்த தடம் தெரியாமல் போக
நாம் என்ன அற்ப பதருகளா....
காலத்தை இழந்தோம்...
கடமையை துறந்தோம்..
வெந்த சோற்றுக்கு வெற்றியை இழந்தோம்...
வீழ்ந்தது நாம் அல்ல நம் சரித்திரம்...
காலத்தை வென்ற தமிழா..
களம் உனது பயில்விடம்,,
ஏரும் போரும் உனது தொழில்....
உலகத்தில் நம் இனமில்லை...
இனத்தில் முளைத்ததே உலகம்...
கணப்பொழுதும் கண்ணிமைக்க உசித்தமில்லை...
விழித்திடு ! விதைத்திடு ! உயிர்த்தெடு !
இனமும் மொழியும் உயிரென காத்திடு....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக