என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 19 மே, 2012

எனது அம்மா ........

அரசி என பெயரோடு எனை அரசியாய் ஆள வந்தவளே..
எனை ஒருயிராய் அணைத்தவளே.....
தசத்திங்கள்  உபவாசம் கொண்டு யாசித்தவளே...
சுவாசத்தை யாசகமாய் தந்தவளே...
பசியறிந்து நீ உண்ணாமல் உணவளித்தவளே...
இணையாக படைத்தவனை பின் தள்ளியவளே...
உறவுகளுக்கு அப்பாற்பட்டு அங்கமாகி போனவளே...
ஆண்டவனின் பிம்பத்தை சுயமாக கொண்டவளே....
எனது உணர்ச்சிக்கு உரு கொடுத்து வளர்ச்சி கண்டவளே...
உனக்கு நன்றியுரைப்பது நன்றல்ல..
இப்பிறவி போதாம்மா உன்னோடு வாழ..
சுயநலமே என்றாலும் நீயே எப்பிறவியிலும் என் தாயம்மா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக