என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 21 மே, 2012

வீழ்வதும் வாழ்வதும்

ஆறாத காயங்கள் யார் யாரோ
தருவித்த பொழுதிலும்....
தேறாது என சொன்னவர் உள்ள பொழுதிலும்
நான்  தேறி போனதென்ன....!
வற்றாத அறியாமை கடலுக்குள் தடுமாறி
வீழ்ந்து விட்ட பொழுதிலும்.....
மீள்வது அரிதென்று உரைத்தவர் உள்ள பொழுதிலும்..
நான்  மீண்டு போனதென்ன.....!
வீழ்வதும் வாழ்வதும் என் கையிலே....
வீழ்த்த நினைப்பதும்..
விழ வைப்பதும்..
புரியாமல் எனை  புரிந்து கொண்டவர் கையினிலே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக