என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 25 மே, 2012

நிலவே...

நிலவே...
உனை பற்றி
நான் எத்தனித்த எண்ணங்கள்
ஈடாக எதை சொல்வேன்.....
கதிரவனிடம் கவர்ந்த
அனலை அகத்தில் அடக்கி
குளிரை இதமாய் எமக்களிப்பாயே..
தீதை கூட சுகமாக்கும் விந்தை உன்னிடமே...
நிலையாக நில்லாமல்
அரை மாதமும் ஓயாமல்
வளர்ந்து தோயும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்
வாழும் வழிமுறையை...
உன்னை பெண்ணுக்கே வர்ணித்தோர் இருக்க..
எம் எழுத்து உனை வாழ்விற்கு
வர்ணனை செய்யும்........
நித்திய பூரணமாய் ஒளிர்வாய்
முப்பதின் பாதியில் முரணாக இருள்வாய்..
கார்மேகத்தில் காணமல் போவாய்...
நட்சத்திர படையலை அருகில் கொண்டு
அசராத அழகை அள்ளி தருவாய்...
நிலையில்லா இவ்வாழ்வை இனிதாக உரைப்பாய்...
இயற்கை அளித்த "தன்னம்பிக்கை" சிறப்பு நீ !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக