நானும் எம்மினத்தை போலதான்...
என் சுயம் எம்மொழியை அண்டியே !!!
இனிக்கும் இனிமைதான் எம்மொழி...
வளர்ப்பார் குறைவுதானே.......நானும் அது போலத்தானே.....
எத்திக்கிலும் நீண்டு பரந்திருக்கும்...
தனக்கென்று அடி நிலம் இல்லாதிருக்கும்...
தன்னை பற்றி சிந்திக்காது எம்மினம்.......என்னை போலவே...
உலகிற்கே கற்பிக்கும் குணமுடையது...
தேசாதி தேசங்களுக்கும் தன்னை அர்ப்பணித்தது...
சமயத்தில் வாழ வக்கற்று நிற்கும்......தப்பாது ஒப்பாகி போவேனே...
உயிருடன் உருக்குழைவதும்..
தன்னிலையில் மாற்றம் கொள்ளாதிருக்கும் வரையில்...
நானும் எம்மினமும் தன்னந்தனியேனே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக