என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 25 மே, 2012

தன்னந்தனியேன்...



நானும் எம்மினத்தை  போலதான்...
என் சுயம் எம்மொழியை அண்டியே !!!
இனிக்கும் இனிமைதான் எம்மொழி...
வளர்ப்பார் குறைவுதானே.......நானும் அது போலத்தானே.....
எத்திக்கிலும் நீண்டு பரந்திருக்கும்...
தனக்கென்று அடி நிலம் இல்லாதிருக்கும்...
தன்னை பற்றி சிந்திக்காது எம்மினம்.......என்னை போலவே...
உலகிற்கே கற்பிக்கும் குணமுடையது...
தேசாதி தேசங்களுக்கும் தன்னை அர்ப்பணித்தது...
சமயத்தில் வாழ வக்கற்று நிற்கும்......தப்பாது ஒப்பாகி போவேனே...
உயிருடன் உருக்குழைவதும்..
தன்னிலையில் மாற்றம் கொள்ளாதிருக்கும் வரையில்...
நானும் எம்மினமும் தன்னந்தனியேனே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக