என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 24 மே, 2012

அனைத்தும் நீயே..


ஆக்கமும் அழிவும் உன்னகத்தே..
இம்மையும் மறுமையும் உன்னாலே..
இழப்பும் வாய்ப்பும் உனக்கானதே..
இறப்பும் பிறப்பும் உன்னிடத்தே...
ஏற்றமும் இறக்கமும் உன் தடத்தே..
நன்றும் தீதும் உன்னடத்தையிலே ..
பெறுவதும் அளிப்பதும் உன்வசமே..
உன்
வீரிய வீச்சை வெளியிடு..
அதிலுள் உன் மூச்சை  கலந்திடு...
மாறாத மாற்றமொன்றை கண்டிடு..
மூடி விட்ட கதவை உதைத்திடு..
காணாத புது உலகை கண்டிடு..
வட்டத்தில் வடிவமாய்
கோலத்தில் புள்ளியாய் இராமல்....
சிறகிட்ட எண்ணங்களை
சிதறாமல் வெற்றிக்கு வழியிடு...
என்றும் நீ உனக்கானவன்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக