என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அன்புள்ள சகோதரனுக்கு !!!


தம்பி நீ இருக்க எமக்கு முப்படை எதற்கு !
 
என்றும் நான் இருப்பேன் பக்கத்துணை  உனக்கு ! 
 
அடங்கா அரிமாவின் பெருங்சக்தி உனக்குள் இருக்கு !
 
உன் சக்தி கொண்டு அகிலத்தை உன் சட்டைப்பையில் போட்டு சுருக்கு !
 
எதிர்த்து எமன் வந்தாலும் அடித்து நொறுக்கு !
 
அலைபாயும் உன் மனதை வெற்றி பாதையில் திருப்பு !
 
வெற்றி பாதையில் சிறுநரிகள் வந்தால் நீயும் வைத்துவிடு நெருப்பு !
 
நல்லவன் போல் நடித்திடும் துரோகி நாய்களின் வாலை ஓட்ட நறுக்கு !
 
எந்த நிலை வந்தாலும் ஏற்றாதே உன் தலையில் ஆணவ செருக்கு !
 
எக்காரணமும் பெண்ணை தூற்றாதே ! உனக்கு பிடித்துவிடும் கிறுக்கு !
 
உன் அளவில்லா அன்பை கொண்டு உறுதியான இரும்பையும் உருக்கு !
 
அறிவாயுதம் கொண்டு உன் சுற்றத்தின் வளம் பெருக்கு !
 
புறங்காட்டா வீரமும் ,பெருங்கருணையும் நீயும் கொண்டால் அதுவே உன் சிறப்பு !
 
கலங்காதே எதற்கும் ! அசாதாராணமானது உனது பிறப்பு !
 
எடுத்து காட்டாக இருக்க வேண்டும் சரித்திரத்தில் உன் இறப்பு !
 
தலைவன் சென்ற வழி கண்டு தனி தமிழீழம் பெறுவது உன் பொறுப்பு !
 
எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு கிட்டாதே தமிழனாக பிறக்கும் 
வாய்ப்பு !
 
தயங்காதே ! இந்த தன்னிகரில்லா தமிழன் என்றும் உன் பக்கம் 
இருப்பு.....!!!!!!!!!!!



2 கருத்துகள்:

  1. வெற்றி பாதையில் சிறுநரிகள் வந்தால் நீயும் வைத்துவிடு நெருப்பு !

    நல்லவன் போல் நடித்திடும் துரோகி நாய்களின் வாலை ஓட்ட நறுக்கு !

    எந்த நிலை வந்தாலும் ஏற்றாதே உன் தலையில் ஆணவ செருக்கு !

    எக்காரணமும் பெண்ணை தூற்றாதே ! உனக்கு பிடித்துவிடும் கிறுக்கு !

    உன் அளவில்லா அன்பை கொண்டு உறுதியான இரும்பையும் உருக்கு !

    அறிவாயுதம் கொண்டு உன் சுற்றத்தின் வளம் பெருக்கு !

    அருமையான வரிகள்.....

    பதிலளிநீக்கு