சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம்
சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா?
வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம்
வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா?
சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில்
ஆயுதம் ஏந்தி ப்போராடினோம்
சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை
சூழ்ந்த பகைவரை சாடினோம்!
வீரர்கள் சாவது இல்லையே -விழி
நீரினை சிந்தாதே அன்னையே
போரில் மடிவதை எண்ணியே -தமிழ்
போராளி மகிழ்வது உண்மையே!
அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி
மேலொரு துயரில்லை உனக்கம்மா
அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன்
அரணாய் இருக்கிறான் பாரம்மா!
புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு
போதும் புசிப்பது இல்லையே
உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம்
உரிமைகள் கைவிடார் உண்மையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக