என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 14 செப்டம்பர், 2011

தமிழா!


தமிழா! உன் காலுக்கு கீழ் பதுங்கியுள்ளதடா பூமி 


நீ மேல் நோக்க வேண்டாம் வானை


அது கீழ் இறங்கி வரும் உனக்கு நேரே


உன் பார்வையில் உள்ளதடா நெருப்பும்


உன் சுவாசத்தில் உள்ளதடா அனலும்


உன் சுண்டுவிரலில் சாயுமடா தடைகள்


உன் தோளில் உள்ளதடா வீரம்


பெரும் புயலுக்கு ஒப்பானதடா உனது கோபம்


பெரும்படையும் சிதறுமடா அதைக் கண்டு


இந்த வையகத்தில் நமக்கு நிகர் நாமே


இந்த உலகத்தின் மூத்த குடியே !!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக