என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 24 அக்டோபர், 2011

இனாம் தமிழன்


இனமான தமிழன் இருந்த காலம் போக இனாம் தமிழன் உருவெடுத்த மாயம் என்ன ..

வெற்றி சரித்திரம் படைத்த தமிழன் வெந்த சோற்றின் மீது பற்றுண்டு தரித்திரம் கொண்டதென்ன..

பகட்டில்லா பண்பாடு கொண்ட தமிழன் பகட்டிற்காக மானமிழந்து போனதென்ன ..

விஞ்ஞானமும் வியந்து போகும் மெய்ஞானம் கொண்ட தமிழன் தறிகெட்டு போனதென்ன..

வேங்கைக்கும் வியர்த்து போகும் வீரத்தமிழன் வரண்டு போய் வழுவிழந்ததென்ன ..

இனமே அழிந்தாலும் இன்னிசை கேட்டு இனிமையாக பொழுதை கழிப்பதென்ன ..

உயிரை கொடுத்து இனம் காக்க அவசியமல்ல சிறு உணர்வு மட்டும் கொண்டாலென்ன ..

உணர்வு கொண்டால் தமிழனை எதிர்த்து சீண்ட பல கயவன் நினைப்பானா என்ன ..

இத்தனை கூறும் பொழுதிலும் என்மேல் கோபம் கொள்ளும் தமிழனுக்கு உண்மை கசப்பதென்ன ..

போராட்டமே வாழ்க்கை என்பதல்ல போராடாமல் வாழ்கையே இல்லை புரியாமல் போனதென்ன..

இத்தனை  "என்ன "உபயோக படுத்திய பொழுதிலும் இந்நிலைமை மாற  பதில் கிடைக்காமல் போவதென்ன...

வியாழன், 20 அக்டோபர், 2011

தமிழர் கூட்டம்

மலேயா  தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது... கூலிவேலை செய்யும் கூட்டம்தான் தமிழர் கூட்டம்.....

இங்கிலாந்து முன்னாள்  பிரதமர் சர்ச்சிலின் கேலி பேச்சு..

நீங்கள் கூறும் அதே தமிழர்கள்தான் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் குரல் வலையின் ரத்தத்தை உறிஞ்ச போகிறது....


பசும்பொன் தேவர் மற்றும் நேதாஜி அவர்கள்  மறு பதிலடி கொடுத்தது மட்டுமல்ல மணிப்பூர் போரில் தமிழர்கள் தாங்கிய படை வெள்ளையனை சிதறடித்து விரட்டியது......

புதன், 19 அக்டோபர், 2011

தமிழா வாடா !!



சிலிர்த்தெழும் ஆழியென தமிழா நீயும் சீறி வாடா !!
உன் சீற்றத்தால் எதிரிகளின்  கொட்டமழித்து போடா

பசித்தாலும் புல்தின்னா புலியென புறப்பட்டு வாடா !!
உன் பாய்ச்சலால் தீமைகளை சுட்டெரித்து போடா

கட்டுக்கடங்கா காட்டாற்று வெள்ளமென திரண்டு வாடா !!
திரளாக நிற்கும் தடைகளை அடித்துக்கொண்டு போடா

போரென்றால் முன் நிற்கும் இனமென்று சொல்லி வாடா !!
எதிர்நிற்கும் பகைவனின் முதுகை புண்ணாக்கி போடா

தமிழன் போல் ஓர் இனம் இல்லை என்றே மார்தட்டி வாடா !!
அவனுக்கு இணையான ஒரு வீரனில்லை பார் அறியும் போடா !!.

என்றும் தமிழன்னையின் புகழ் ஒங்க கைகொடுக்க வாடா !!
இதை தடுக்கும் தறுக்கர்களின் கரம் கொய்து போடா

தமிழீழம் மட்டுமல்ல தமிழன் இருக்கும் இடமெல்லாம் கொடி நாட்டுவோம் வாடா !!
சாத்தியமாக்குவோம் இதை தலைவன் காட்டிய பாதையில் நில்லாமல் போடா

சாதி மதம் எதுவாயினும் தமிழனாய் ஒரு வட்டத்தில் வாடா !!
வட்டத்தின் அரணாய்  நீயும் நெருப்பாயுதம் ஏந்தி போடா .......

நம் இனம் காக்க உயிரே மயிரென வாடா !!
மரணிக்கும் தருவாயிலும் தமிழ்ப்பேசி  உயிர் விட்டு போடா..


அன்புள்ள தமிழ்ப்பெண்ணே !!!


முறத்தால் புலியடித்த வீரத்தமிழ் வம்ச பெண் நீயம்மா !

படைநடத்தும் வீரனையும் வழி நடத்தும் ஆற்றல் உனக்குள்தானம்மா !

முண்டாசு புலவனும் பாடி வைத்தானே ! நீதானே புதுமை பெண்ணம்மா !

எப்போதும் மறவாதே தமிழன்னையும் உன்வழி தோ
ன்றலம்மா !

நம் இன பெருமையை பேணிகாப்பது உன் கடமையம்மா !

பண்பிற்கும் பண்பாட்டுக்கும் இவ்வுலகில் உனக்கு நிகர் ஏதம்மா !

தேடினாலும் கிடைக்காத தேனாமிர்தம் நம் தாய் தமிழ் மொழியம்மா !

தாய்மொழியும் தமிழினமும் உன் இருவிழிகள் தானம்மா !

உன்னை போற்றிப்பாடாத சித்தனும் இல்லை கவிப்பித்தனும் இல்லையம்மா !

உன் சுயமறிந்து உன் புகழறிந்து நீயும் உனை உணர்ந்து கொள்ளம்மா !

உனை உணராமல் மதிமயங்கி செல்கிறாயே மேற்கத்தி திசையம்மா !

மதிமயங்கி சுயம்மறந்து உன் புகழழிய காரணம் நீயேதானம்மா !

இயக்குவதும் இயங்கவைப்பதும் அனைத்தும் உன் செயல்தானம்மா !

மதிகெட்ட மடையர்களின் சொல்கேட்டு உன்னை உனக்குள் வைக்காதே சிறையம்மா !

முப்பத்திமூன்று என்ன ! முழுவதையும் உனக்கே தருகிறோம் பாரம்மா !

அதற்க்கு தடையாக இருப்பது நீ கொள்ளும் பெரும் மனதயக்கமம்மா !

அஞ்சுவோர்க்கும் தயங்குவோர்க்கும் எதுவும் அசாத்தியம்தானம்மா !

அசாதாரணமானவள்  நீயல்ல ! புரிந்துகொள் நீயும்  மறதமிழ் பெண்ணம்மா !

கலங்காதே என்றும் இந்த தன்னிகரில்லா தமிழன்  உன்பக்கம் துணையம்மா !

செவ்வாய், 18 அக்டோபர், 2011

எவரும் இருக்க முடியாது.....

 முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.....

காதல் கொள்ளுங்கள்

காதல் கொள்ளுங்கள்
அவதாரங்கள் எடுப்பீர்
உணர்வுக்குள் அழகை உணர்வீர்
மொழியின் மேல் காதல் கொள்வீர்
இன்னொரு இதயம் உருவாகும்
அதுவும் சிறகு விரிக்கும் !

கனவுக்குள் கனவு மெய்ப்படும்
ஐம்புலன்களும் சிரிக்கும் அழும் !
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !

எந்த வயதிலும் சிலிர்ப்பை சுகிப்பீர் !
விழித்து இருக்கையில் கனவுகள் விளையும்
உறக்கத்தில் உயிர்ப்பறவை சிறகடிக்கும்
உயிர் பிரிந்திடும் வேளையிலும்
இனிமை கொட்டும் !

சமூக சிறைகளை உடைத்திட சக்தி கொள்வீர் !
முகங்களை தெளிவீர் !
சிந்தைக்குள் மயக்கம்
செலவின்றி நிலாப்பயணம் செல்வீர்

ஆகாயத்துள் பறந்து வர அவசர சிறகு
பனித்துளிக்குள் இனிய பிரவேசம் !

விழி இமையில் புல்விரிப்பும் பூந்தோட்டமும்
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !

மனம் வானமாய் விரியும்
விழிப்படலத்துள் மேகம் மிதக்கும்
தேகம் சிலையாகும்
சிலை தேகமாய் சிலிர்க்கும் !

மௌனம் கூட ஆர்பரிக்கும்
வாழ்வின் முரண்கள் அரண்களாகும்
துயரிலும் இதயம் பஞ்சாகும் !

ஆதலினால்
வேண்டி நிற்பீர்
ஒரு வரம் - அடுத்த பிறவியிலேனும்
பிறந்திட வேண்டும் ...
" ஒரு தமிழனாய்" என ...

ஆதலினாலே ...

தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் ! தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அய்யாவின் நூற்றிநான்காவது அவதார திருவிழா..

அய்யாவின் நூற்றிநான்காவது அவதார திருவிழாவிற்கு இந்த சிறுவனின்  சமர்ப்பணம்...

உதயமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அற்புத மனித சூரியனே !

அடங்கா வேங்கை கூட்டத்தை அன்பால் அடக்கி போன மனித தெய்வமே !

அழுதாலும் தொழுதாலும் இனி கிடைக்காது உன் போல் அரிய பொக்கிசமே !

நின் பாதம் மட்டுமல்ல ! நீ உதித்த திசை நோக்கி வணங்கி தொழுவோமே !

உன்னை கண்டு வியந்து போனான் வங்கத்து மைந்தனே !

நீ சுற்றிய சிலம்பில் சிதைந்து போனது சிறுநரி கூட்டமே !

தேசம் எனது சுவாசம் எனதுரைத்த எம் தமிழகம் கண்ட தங்கமே !

விவேகமுள்ள உனது வீரத்திற்கு நிகரில்லை காட்டு சிங்கமே !

நீ இன்று  இருந்திருந்தால் பெற்றுருப்போம் தனி ஈழமே !

அய்யா நின் பொறுமைக்கு இணையில்லையே கடல் ஆழமே !

தீண்டாமைக்கு முதன் முதலில் இரும்புக்கரம் தொடுத்த மனித நேய மாந்தனே !

தமிழனுக்கும் வீரம் ! தன்மானம் உண்டு !என  உன்னை கண்டு உணர்ந்தான் வெள்ளையனே !

அறம் காத்து ! வீரம் விளைத்து தேசியம் காத்த செம்மலே !

உன்னை நேரில் கண்டிருந்தால் எங்களுக்கு கிடைத்திருக்கும் இப்பிறவி பாக்கியமே !
நீ விட்டு போன பணியை தவறாமல் செய்து முடிப்போம் !!!! "" இது உன் மேல் சத்தியமே""


அன்புள்ள சகோதரனுக்கு !!!


தம்பி நீ இருக்க எமக்கு முப்படை எதற்கு !
 
என்றும் நான் இருப்பேன் பக்கத்துணை  உனக்கு ! 
 
அடங்கா அரிமாவின் பெருங்சக்தி உனக்குள் இருக்கு !
 
உன் சக்தி கொண்டு அகிலத்தை உன் சட்டைப்பையில் போட்டு சுருக்கு !
 
எதிர்த்து எமன் வந்தாலும் அடித்து நொறுக்கு !
 
அலைபாயும் உன் மனதை வெற்றி பாதையில் திருப்பு !
 
வெற்றி பாதையில் சிறுநரிகள் வந்தால் நீயும் வைத்துவிடு நெருப்பு !
 
நல்லவன் போல் நடித்திடும் துரோகி நாய்களின் வாலை ஓட்ட நறுக்கு !
 
எந்த நிலை வந்தாலும் ஏற்றாதே உன் தலையில் ஆணவ செருக்கு !
 
எக்காரணமும் பெண்ணை தூற்றாதே ! உனக்கு பிடித்துவிடும் கிறுக்கு !
 
உன் அளவில்லா அன்பை கொண்டு உறுதியான இரும்பையும் உருக்கு !
 
அறிவாயுதம் கொண்டு உன் சுற்றத்தின் வளம் பெருக்கு !
 
புறங்காட்டா வீரமும் ,பெருங்கருணையும் நீயும் கொண்டால் அதுவே உன் சிறப்பு !
 
கலங்காதே எதற்கும் ! அசாதாராணமானது உனது பிறப்பு !
 
எடுத்து காட்டாக இருக்க வேண்டும் சரித்திரத்தில் உன் இறப்பு !
 
தலைவன் சென்ற வழி கண்டு தனி தமிழீழம் பெறுவது உன் பொறுப்பு !
 
எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு கிட்டாதே தமிழனாக பிறக்கும் 
வாய்ப்பு !
 
தயங்காதே ! இந்த தன்னிகரில்லா தமிழன் என்றும் உன் பக்கம் 
இருப்பு.....!!!!!!!!!!!



ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நவீன புரட்சியாளர்கள்

புரட்சியாளர்கள் என்ற போர்வைக்குள் வெறும் வறட்சியாளர்களே அதிகம் இணையத்தில் ..
வறட்சியான சிந்தனைக்கு இவர்கள் போற்றி கொள்ளும் போர்வை புரட்சியாளர்கள் ..

சொன்னானே " சே " என்ற புரட்சியாளன் சாகும் தருவாயில் என்னை சுட்டு விடுங்கள் என்று..
இவர்கள் செய்வார்கள் புரட்சி இணையத்தில் அமர்ந்து வாயில் கண்டதை மென்று !!
இவர்கள் செய்யும் வறட்சி !! மக்களை கொண்டு போகாதே நல்ல வழியில் சென்று !!
இவர்கள்  ஒற்றை சிந்தனையுடன் கூடி  "நல்ல மனிதர்களை சாடி பிழைப்பார்களே" இன்று !!
இவர்கள் ஏமாற்றமடைந்த மனதின் கழிவுகளை கொண்டு வந்து கொட்ட இணையமே அன்று !!
இனியும் பொய்யாக தோற்றமளிக்கும் கொள்கைகளின் பின் சென்றால் செய்து விடுமே மக்களை கொன்று !!
புரட்சியாளனுக்கும் வறட்சியாளனுக்கும் அடையாளம் கண்டு நம் இனத்திற்கு இருப்போம் அரணாய் நின்று !!

உலகம் உங்கள் கையில்

கரங்களை உரங்களாக கொண்டு உழையுங்கள்                                                                                                                                           ....உலகம் உங்கள் கையில்

பதிப்பகத்தாரை போல அவ்வபோது
புதுப்பித்து கொள்ளுங்கள் உங்கள் நினைவுகளை
                                                                              ....உலகம் உங்கள் கையில்

தன்னம்பிக்கை கூட்டங்களுக்கு  தவறாமல்

எடுத்து செல்லுங்கள் உங்கள்  அவநம்பிக்கைகளை                                                                                                                                 ...உலகம் உங்கள் கையில்

இழப்புகளுக்காக ஒரு இடத்தை எப்பொதும்

ஒதுக்கி வையுங்கள் உங்கள் இதயத்தில்                
                                                                             ....உலகம் உங்கள் கையில்

மனித நேயம்

அன்பைக்  கடந்த ஆண்டவன் இல்லை 
பண்பை வென்ற பக்தியும் இல்லை 
மனித நேயத்தை கடந்த மனித வாழ்க்கையும் இல்லை 
இப்பூவுலகில் நாம் வாழும் சின்ன இடைவெளியில் 
அன்பை விதைத்து ஆனந்தத்தை அறுவடை செய்வோம் 
பண்பை பகிர்ந்து கொண்டு பாசத்தை வளர்ப்போம் 
மனித நேயத்தை வளர்த்து மகத்தான சமுதாயம் படைப்போம்....

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஆற்று நீர்

சில மனிதர்கள் தனக்குதானே  பாதை  வகுத்து கொண்ட மாதிரி தன்னையே  சித்தரித்து கொள்கிறார்கள்.....
அனைவரிடமும் இருந்து முற்றிலும் தன்னை மாறுபடுத்தி முயற்சி செய்து தன்னை தானே ஏமாற்றி கொள்ளவும் செய்கிறார்கள்...
ஒரு உண்மையை மறந்து விடவும் செய்து விடுகிறார்கள்,,,

மனிதனும் ஆற்றுநீரும் ஒருவகையில் ஒன்று பட்டதுதான்...
ஆற்றுநீர் தனக்கென்று  வகுக்க பட்ட பாதையில் சென்றால்தான் உழவுக்கும் நல்லது !!! ஊருக்கும் நல்லது !!!
அது தன் பாதையை மாற்றி கொள்ள முற்பட்டால் நடக்கும் விபரீதம் போலதான் !!! மனிதனின் தான்தோன்றி தனமான முற்போக்கு சிந்தனை செயலும் !!!