என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 28 ஜூன், 2012

அரங்கு நிறைவு...

திரையரங்கு அல்ல...
நம் வாழ்வரங்கு...
அனைத்துமே நிறைந்தது...
அதீத பற்று...
நிலையா ஆசை...
நடவா கனவுகள்......நம் வாழ்வில் நிறைவுற்று 
அடையா கொள்கை...
அடங்கா உணர்வு..
அணையா வஞ்சம்..
அத்துனையிலும் இல்லை மனிதம் நிறைவு...
நிறைவுகள் நிறைந்த போதிலும் நிறைவில்லை...
குறைவுகளில் தொடங்கும் நிறைவு.......
அதனை உணர்ந்தால் வாழ்வில் மலர்வு...
 

வெள்ளி, 15 ஜூன், 2012

வெறுமை,,,,


இது இன்றியமையாதது
மனித தேவையின் உச்சம்
வாழ்வின் மூலத்தின் மிச்சம்....
கடந்த வந்த தொலைவுகளின் படிவு...
என்றும் இதற்கு இல்லையே முடிவு...
மெய்யை சோதிக்கும்...
ஞானத்தை போதிக்கும்....
மனிதத்தின் மீதியை நிர்ணயிக்கும்,,,
மூளை சங்கமிப்பை பின்னிறுத்தும்....
உள் மனதை கட்டமைக்கும்...
ஆயுளில் முதலும் கடைசியும்
தொடக்கம் வெறுமையுடன்...
நிகழும் வெற்றிடம் உனக்குள்....
இனி நிகழ வேண்டாம் நமக்குள்...

புதன், 13 ஜூன், 2012

வாழ்க்கை...

வாழ தெரிந்தவருக்கு மட்டும்.....
வாடி போவதற்கே பூக்கும்
உணர்வுகளை வேடிக்கைக்கு சூடி கொண்டு...
அணுக்கள் சங்கமித்து
பிடி சாம்பலாய் போகும்
சதைகள் கூடிய உடம்பை போற்றி
வாழுகின்ற !!
நம்பிக்கையில்லா வாழ்க்கையில்
நம்பி வாழ தயக்கம்...
தயக்கத்தில் தொடங்கி மயக்கத்தில்
முடிந்து போகும் - இது
நிச்சயக்கப் படாத பயணம்...
தேவை அதில் நிதர்சனமான கவனம்......
இத்துனைக்கும் காரணம் நீளும் சலனம் !!!
வேண்டியதை பகுத்து...
அச்சத்தை புறத்திலும்
அஞ்சாமை அகத்திலும் வகுத்து...
சுற்றத்தை சுகத்தில் வளர்த்து...
முற்றத்தில் மூட்டைகட்டி வை
உன் அறியாமையை...
ஏற்றத்தில் செல்லும் உன் வாழ்க்கை...
உயிரோடு வாழ்வதல்ல...
உணர்வோடு வாழ்வதே வாழ்க்கை....

சனி, 9 ஜூன், 2012

உன் கைதன்னில் நீ..


உன் கைதன்னில் நீ..
புன்னகைப்பதும் புகழ் பெறுவதும் 
ஆக்கம் செய்வதும் ஆறுதல் கொள்வதும்...
உன்னிடத்தே..
முழுமையுடன் முறுவலித்து
உன்னை நீயே செய்துகொள் சிறப்புடன்,,,
தச்சனும் கொல்லனும் உன்னுள்ளே...
சிந்தித்து சிறப்பை வெளிப்படுத்து...
குறைகளை அப்புறபடுத்து...
உன் கைதன்னில் நீயிருந்தால் 
சிரமும் மணிமுடி தாங்கும்...
மனச்சிறைகளும் சிதிலடையும்.......
மணம்வீசும் பூக்களல்ல நீ !!
அந்தியில் வாடுவதற்கு.....
சீறி வாழும் சிங்கமல்ல நீ !!
ஐந்தறிவில் வாழ்வதற்கு...
தன்னை உணர்ந்து தன்னில் நிறைவு கொள்..
மனிதனாக !!!!!.......