முப்படை கண்டு எப்படையையும்
எதிர் கொண்ட எம் தலைவா
வித்தகங்கள் செய்த விந்தை மனிதா !!
வீழ்த்தி விட்டதாய் எக்காலம் செய்வார்கள்....
வீழ்ந்து போனதாய் பரிகாசம் கொள்வார்கள்...
புலிகளை காட்டில் நரிகள் நர்த்தனமாடும் நேரம் இது....
எச்சில் சோறு தின்று
பிச்சை கொண்டு வாழ்வதை விட ....
மரணிக்கும் மகத்துவத்தை உணர்த்திய மானிடா ....
எம்மினம் உள்ளவரை நீ இருப்பாய் ...
எம்மை போல சாமானியனுக்கும்
சத்தம் இல்லாமல் பித்தம் போக்கிவன் நீ...
உனை கண்டே கண் விழித்தேன்...
உனை கண்டே புத்துயிர் கொண்டேன்...
உன்னாலேயே புத்துணர்வு கண்டேன்....
நீ இல்லாமல் போயிருந்தால்
இன உணர்வு மட்டுமல்ல...
சுய உணர்வும் மீளாமல் சென்றிருக்கும்...
எம் உணர்ச்சிக்கு உணவு ஊட்டிய
பச்சை தமிழனே !!
இன்றில்லாவிடிலும் என்றாவது
உன் இலக்கு கிழக்கில் விடியும்......அச்சமயம்
சமுத்திரத்தில் சரித்திரம் நிகழும்....