வாழ்த்துகூறி வணங்குவதை விட அவரை பற்றி சிறு குறிப்புகள்...
இதுவரை என் அம்மாவின் வாழ்க்கை குறிப்பே எனது வாழ்க்கை பயணத்தின் கையேடு....
பெண்களுக்கே அரசியாக 'பெண்ணரசி' என்று 'தந்தை பெரியாரால்' பெயர் சூட்டப்பட்டவள்...
வீரத்தில் ஊர் மெச்சிய சின்னதுரைக்கு இளவரசியாக முதற் மகளாய் உதித்தவள்...
கடின பொருளாதாரத்தின் விளிம்பில் கூட எங்களுக்கு பசி என்ற உணர்வை அறிய செய்யாதவள்...
நேர் சிந்தனையும் தளராத தன்னம்பிக்கையையும் ஒரு பிடி சோற்றில் ஊட்டியவள்...
இன்று வரை தனக்கென்று சிந்திக்காமல் எங்களுக்கு என்றே சிந்தித்தே தளர்வடைந்தவள்...
பண மூட்டையை சுமக்காமல் புண்ணிய மூட்டையை சுமக்க இன்றளவும் பயிற்சிப்பவள் ..
எந்நிலையிலும் போராட்டத்தையும் போர் குணத்தையும் இளமையிலே என்னில் விதைத்தவள் ...
தலைவர் பிரபாகரனை நேரில் கண்டு இன்று வரை அவர் மீதான பக்திக்கு வழிவகுத்தவள் ...
இன்னும் சொல்ல சங்கதிகள் உண்டு பல ,, அடங்காது சொல்லில் அவளது வாழ்க்கை...
எந்தன் வாழ்நாள் சாதனையாளர் வரிசையில் அம்மாவுக்கே முதலிடம்...
அவளே எப்பிறவியிலும் எனது அம்மாவாக
அவளது பிறந்த நாளில் வணங்குகிறேன் இறைவனை சுயநலத்துடன்....