என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 8 நவம்பர், 2014

அய்யனே



உள்ளமெல்லாம் தேனுருக


நெஞ்சமெல்லாம் பாலாறு


அய்யனே நின் நினைவில்,


நிந்தித்த நெஞ்சமெல்லாம்


நினைவில்லாமல் போக


எனக்கருள்வாய்...!

ஐயனே...!

புத்தியெல்லாம் புரையோடி 
கிடக்கே எம் தேவரே !
சக்தியெல்லாம் மழுங்கி 
போச்சே எம் இராசாதி இராசரே !
சுற்றமெல்லாம் சிதைஞ்சி 
பத்தாயிரம் கால சரிதம் நினைந்து
கண்களுக்குள் ஊற்றேடுக்குதே ஐயனே...!

மாய்வதில்லை

சோர்வுகள் எமை 
ஆட்கொள்கையில்
தீக்குள் விரல் விடுகிறேன்;
வெந்த புண்ணில் 
மாய்வதில்லை துன்பம்;
எனினும் தீயின் வெப்பம்
என்னில் தகிக்கும்..