உள்ளத்தின் உளறல்கள்
ஒவ்வொன்றாய் உதிரும்...
எணண்ங்களும் எழுத்துக்களும்
எதிரெதிராய் வாள் வீசும்...
நாளச்சுரப்பிகள் கற்பனையை
கவிதையாய் சுரக்கும்...
உருவமில்லா சிற்பங்கள்
காகிதத்தில் உருவாகும்...
உயிரில்லா எழுத்துக்கள்
மூச்சுவிட்டு உயிர் வாழும்...
இயற்கையின் சுகிர்வை
உணர்த்தும் ரசனைகளின் ஆலயம்....
காதலில் களிப்போர்க்கு
கண்டபடி கவிபாடும்...
காதலில் நொந்தவர்க்கு
பிரிவில் விழி மூடும்...
அழுகையின் ஆற்றாமையை
அதிர்வாய் வெளிபடுத்தும்...
அடங்கா ஆத்திரத்தின்
கிளர்வாய் வெடித்து சிதறும்...
கவிபாடி திளைத்தோர்க்கு
உண்மை உறைவிடம்...
எனை போல அரை குறைகளுக்கு
அற்புத இருப்பிடம்.........................