என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 28 செப்டம்பர், 2011

கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா


பெண்களுக்குச் சொல்லுகின்றேன் அன்பு செய்து


பெருமையுடன் மனித குலம் காத்து நிற்கும்

வண்மை கொண்ட நீங்கள் இங்கு அடிமையாக

வாழுவதில் நியாயம் இல்லை புரிந்து வாழ்வீர்

உண்மை இல்லாக் கணவனையும் உவந்து போற்றி

உயர் வாழ்க்கை வாழ்வது வாய்ப் போலி செய்து

கண்மணியாய் அவனையுமே காத்து நிற்கும்

காவியத்துப் பெண்கள் அல்ல !! 

உயிர்கள் நீங்கள்


உங்களுக்கும் உடல் உண்டு !! உணர்ச்சி உண்டு !!

உள்ளுக்குள் எத்தனையோ ஆசை உண்டு

தங்களையே புரியாத தடியரோடே

தான் வாழ்தல் நெறி என்ற மடமை தன்னை

புண்களைப் போல் கொண்டு நீரும் வாழ்ந்திருத்தல்

பொய் மடமை கோழைத்தனம் புரிவீர் நீரே

கண்கள் என்று உம்மை இங்கு புரிந்து கொள்ளா

கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா....

சுதந்திரம் என்பது மஞ்சமா


சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம்


சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா?

வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம்

வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா?

சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில்

ஆயுதம் ஏந்தி ப்போராடினோம்

சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை

சூழ்ந்த பகைவரை சாடினோம்!

வீரர்கள் சாவது இல்லையே -விழி

நீரினை சிந்தாதே அன்னையே

போரில் மடிவதை எண்ணியே -தமிழ்

போராளி மகிழ்வது உண்மையே!

அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி

மேலொரு துயரில்லை உனக்கம்மா

அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன்

அரணாய் இருக்கிறான் பாரம்மா!

புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு

போதும் புசிப்பது இல்லையே

உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம்

உரிமைகள் கைவிடார் உண்மையே!

எதிரியே நமக்கு உதவி செய்பவன்.....

எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுகிறான். 

நம்முடைய திறமைகளை கூர்மைப்படுத்துகிறான். 

ஆதலால் நமது எதிரியே நமக்கு உதவி செய்பவன்.....

பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை



பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். 

அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். 

பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

தமிழா நீ இன உணர்வு கொள்வது எப்பொழுது ?



ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது! உலகமே இப்படி இருக்கும்போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்????

திங்கள், 26 செப்டம்பர், 2011

வீரம்


                                                       வீரம் 
""வீரம் என்ற குணம்தான் எதிரியும் தன்னை மெச்சும் படியான செயலை செய்யும் !!!
கோழைத்தனம் அவ்வாறு செய்யாது"" ------தேவர் அய்யா 

நமது வீரம் பகைவரை நடுங்க செய்யும் !!!அவன் படைகளை தூள்  தூளாக்கும் !!!

நமது தன்மானத்தை காத்து நிற்கும் !! நம்மை தகுதியோடு வாழ வைக்கும் !!!

நமது வீரம் அடுத்தவரின் பயத்தை போக்க வைக்கும் !! நம் பலத்தை காட்ட வைக்கும் !!!

வீரம் நம்மை மண்ணிலே புதைத்தாலும் !! மக்கள் மனதில் விதைக்க வைக்கும் !!!

ரத்தம் குடிக்கும் புத்த பூமியே !!!!!!!

ரத்தம் குடிக்கும் புத்த பூமியே!

தாய் தமிழகத்தில் இருந்து மானங்கெட்ட தமிழன் எழுதுகிறேன்......

எங்கள் உயிரென்ன நீ மழித்துவிட்ட மயிரென்று நினைத்தாயோ?

சாவு எம்மினத்திற்கு புதிதல்ல !


நாங்கள் செத்து செத்தே சரித்திரம் செய்தவர்கள்.....


பதறாதவர்கள் கூட சிதறிப்போவார்கள்.....


எம் ஈழ நாட்டு ஓலம் கேட்டு......


இந்த ஐ.நா என்ன......அந்த ஆண்டவனே அழுதுதான் போனான்.....


அங்கே நடந்த பூலோக மாற்றம் கண்டு......


"ஒருமுறை பிறந்தவனெல்லாம் ஒரேமுறை செத்துப்போகிறான்"


திரும்பவும் படி மேலே சொன்னதை......!!!!!!!!


பாவம் எம் தலைவன்..... பிறரைப்போல ஒருமுறைதான் அவனும் பிறந்தான்.....


ஏய் சிங்கள நாயே!!


நீ இன்னும் எத்தனை முறைதான் அவனை சாகடிப்பாயோ தெரியாது......


திரும்பி வருவான் உனக்கு புரியாது!!!!


"தமிழீழம்"
என் தாத்தன் காலத்து கனவு.......
என் தகப்பன் காலத்தில் நிலவு......
என் தலைமுறையில் விழுந்த எழவு......
இனிமேல்தான் தெரியும் விளைவு......


உலக சமுதாயமே இதை கேள்!!!!!
என் பிள்ளைக்காலத்தில்.....


இனி மே மாத விடுமுறை கழிக்க செல்வோம் தமிழீழ தேசம்!!!!


அங்கே உயரே பறக்கும் புலிக்கொடி......


உள்ளே வீற்றிருக்கும் விடுதலை புலி.......


வணங்கிவிட்டு வருவோம் விதிமுறைப்படி !!!!


ஈழ தேச விடுதலைக்காக உயிர் துறந்த போராளிகளையும்,எம் தாய் வழி சொந்தங்களையும்



பாதம் தொட்டு வணங்குகிறேன்.!!

இழப்பதை இழந்தாச்சு .........இனி ஈழப்பாதை எமதாச்சு........ 

                                   
                                                                           வெளியீடு..பாசறை பிரகாசு 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

எண்ணமும் செயலும்

எண்ணமும் செயலும் ஒரே நேர்கோட்டில் அமைக்க முயற்சியுங்கள் ....

எண்ணுவதை செயல் வடிவம் கொண்டு செய்து முடியுங்கள் ....
 

இல்லையெனில் செய்ய முடிந்ததை எண்ணங்களாக மாற்றி கொள்ளுங்கள் ....

இது தவறும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையின் அமைதி பறிபோக கூடும்....


இலக்கு இல்லாத அதிபல திறமை இருந்தென்ன லாபம்..

இது மகா பாரதத்தில் நடந்த சம்பவம் ..

பாரத போர் உச்சக்கட்டமாய் இருந்த நேரம்..போரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடியாத நேரமது.....
பகவான் சிறி கிருட்டினர்  இதை பற்றி ஆழ்ந்த சிந்தனை கொண்டிருக்கும் நேரத்தில் அவ்வழியே மகா பலம் பொருந்திய ஒரு வீரன் சென்று  கொண்டிருந்தான்..கிருட்டினர் அவனை அழைத்து அவனை பற்றிய விவரம் கூறுமாறு வினவினார்..
அவன் தான் ஒரு மாபெரும் வில்வித்தை காரனென்றும்  ..ஒரே அம்பில் பல நூறு பேரை கொள்ளும் சக்தி  படைத்தவன் என்றும் பெருமை பட கூறினான்,,கிருட்டினரும் அவனை பரிசோதிக்க வேண்டி அவனை அவன் திறமையை தன்னிடம் காட்டுமாறு பதிலுரைத்தார்..
அவன் உடனே ஒரு மரத்தை காட்டி ஒரே அம்பில் இந்த மரத்தில் உள்ள அத்தனை இலைகளையும் கொய்து காட்டுகிறேன் என்று சவால் விடுத்தான்..அதற்குள் கிருட்டினர் அம்மரத்திலிருந்து இரு இலைகளை கீழே விழ செய்து தன் காலுக்கடியில் மறைத்து கொண்டார்..அவனும் அம்பை எய்தான்..

அவ்வம்பு மரத்திலுள்ள அனைத்து இலைகளையும் கொய்து முடித்து கிருட்டினரின் காலுக்கடியில் பாய்ந்து கீழே உள்ள இலைகளையும் கொய்து முடித்தது..
அவனின் வில் வித்தையை கண்டு  கிருட்டினருக்கோ மகா ஆச்சர்யம் ..அவனை பார்த்து நீ யார் பக்கம் போர் புரிய போகிறாய் என்று கேட்டார்..

 அதற்கு அவனோ எனக்கு பாண்டவர் ,கௌரவர்கள் இரு அணிகளில் எந்த அணி தோல்வி நிலையை நோக்கி செல்கிறதோ அந்த அணியின் பக்கம் சென்று விடுவேன் என்றான்..
அதற்கு கிருட்டினர் இரு பக்க தோல்வி நிலைக்கும் நீ போரிட்டால் எவ்வாறு போர் முடிவடையும் என்று சொல்லி முடிக்கும் முன்,,
அவன் கூறினான் அது எனக்கு தேவையில்லை என் திறமையை காட்டுவதே என் வேலை என்று இறுமாப்புடன் கூறினான்..
 
கிருட்டினர் உடனே தனது விசுவரூபம் காட்சி அளித்து அவனுக்கு தான் யார் என்பதை உணர்த்தி அவனிடம் ""உனக்கு அதிபல திறமை இருந்தாலும் உன் திறமை சரியான ஒரே திசையில் வழியில் செல்ல வில்லையெனில் அது உனக்கும் உலகுக்கும் பிரயோசனம் இல்லை ""என்று உணர்த்தி அவனுக்கு சொர்க்கலோக பதவி அளித்து மோட்சம் அடைய செய்தார்,,,

இலக்கு இல்லாத எந்த ஒரு சக்தியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு ...


சனி, 24 செப்டம்பர், 2011

பகை வெல்லுங்கள்

அம்பெடுத்து பகை வெல்வது ஒரு வகை ,,

அன்பெடுத்து பகை வெல்வது ஒரு கலை,,

எதிரியிடமும் அன்பை செலுத்துங்கள் ..  

எனினும் அம்பை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள் !!!!!!!

தேவையெனில் அம்பையும் செலுத்த தவறாதிருங்கள்   !!!!!

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

மீன்கள்


இறந்து போன மீன்கள்தான் தண்ணீர் போகும் வழியே போகும்,,
உயிருள்ள மீன்கள் தண்ணீரை எதிர்த்துதான் செல்லும்...
மீனகளுக்கே அந்த குணம் எனில் மனிதர் நமக்கு ???
நம்முடைய பிரச்சனைகளை போர் குணத்துடன் சந்தித்து வெற்றி பெறுவோம்..

தேடல்

நிறைய நேரங்களில் நாம் தேவையும் தேடல்களுமே வாழ்க்கை பயணத்தின் பல பக்கங்களை நம்மையும் அறியாமல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது..-எனினும் தேவையே இல்லை என தெரிந்திருந்தும் தேவையற்ற ஒன்றின் தேடலை மனம் தேடி கொண்டே இருக்கிறது !!!.......இனியவள் 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஆசைகளை அடக்க விட்டால் ஆபத்துகள் வரும்...

அந்த காலத்தில் ஆப்பிரிக்காவில் குரங்குகள் அதிகம் .அவை ஊருக்குள் புகுந்து தொல்லைகள் தரும்.அதனால் மக்கள் அவற்றை பிடித்து காட்டுக்குள் போய் விட்டு விடுவார்கள்..குரங்குகளை வேட்டையாடி கொல்வது எளிது .ஆனால் உயிருடன் பிடிப்பது சிரமம்.அவற்றை உயிருடன் பிடிக்க அவர்கள் ஒரு தந்திரம் செய்வார்கள்..
தேங்காயை எடுத்து அதில் சிறிய துளை போட்டு விடுவார்கள்..சிரமப்பட்டு ஒரு கையை நுழைக்கும் அளவுக்கு அந்த துளை இருக்கும்.துளைக்குள் கொஞ்சம் சோற்றை வைத்து விடுவார்கள்..
குரங்குகளுக்கு சோறு என்றால் மிகவும் பிடிக்கும்.தேங்காயின் ஒரு முனையை கயிற்றால் இணைத்து மறைவாக வைத்து விடுவார்கள் ..இது போன்று பல தேங்காய்களை அங்கங்கே போட்டு வைத்து விடுவார்கள்.
குரங்குகள் வரும் சாதத்தின் வாசனை அவற்றை இழுக்கும்.உடனே சாதம் இருக்கும் ஓட்டைக்குள் கை விடும் ,சோற்றை எடுத்து கையை கெட்டியாக மூடி கொள்ளும்,ஆனால் அவற்றால் அந்த துளை வழியே கையை எடுக்க முடியாது...காரணம் கையில் சோற்றை கெட்டியாக பிடித்திருப்பதுதான்.சோற்றுடன் மூடியிருக்கும் கையை திறந்து ,விரல்களை சுருக்கி அவற்றால் கையை வெளியே எடுத்து விட முடியும்.ஆனால் ,சோற்றின் மேல் உள்ள ஆசையால் அவை அப்படி செய்யாது.குரங்கு பிடிப்பவர்கள்  எளிதாக கையிற்றை இழுத்து குரங்குகளை பிடித்து விடுவார்கள்..
நம்முடைய அதிக ஆசைகள்தான் பிரச்சனைகளுக்கு காரணம்..தேவையற்ற ஆசைகளை புறக்கணிப்போம் .ஆசைகளை அடக்க விட்டால் ஆபத்துகள் வரும்...

அன்பே சொர்க்கம் ................


உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக்
கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்வொருவரும் மற்றவரைக் கொன்று
கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு சொர்க்கம் ஆகக்கூடிய இந்த உலகை நரகமாக
ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
அன்பு செய்யுங்கள்.
இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.


 வெளியிட்டது எனது தங்கை ....இனியவள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தேடல்


நான் ஏறி கொண்டே இருக்கிறேன் என் லட்சிய  சிகரம் தேடி ..

தோண்டி கொண்டே இருக்கிறேன் என் அறிவு புதையலை தேடி..

பெருங்கடலில் நீந்தி கொண்டே இருக்கிறேன் அமைதி தீவை தேடி...

வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் வாழ்கையின் அர்த்தம் தேடி..


நீங்கள் நீங்களாக இருங்கள்...........


இலட்சியத்தை அடைய தூக்கம் வராத கனவு காணுங்கள் .......
நீங்கள் நீங்களாக இருங்கள்...........
நம்முடைய எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன .......
தனித்தன்மை இருந்தால்தான் நாம் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்.....
நம்மை மற்றவர்களை மாற்ற போல இந்த உலகம் முயற்சிக்கும்.......
அந்த மாய வலைக்குள் சிக்காமல் நீங்கள் நீங்களாவே இருங்கள்...........

புதன், 14 செப்டம்பர், 2011

தமிழா!


தமிழா! உன் காலுக்கு கீழ் பதுங்கியுள்ளதடா பூமி 


நீ மேல் நோக்க வேண்டாம் வானை


அது கீழ் இறங்கி வரும் உனக்கு நேரே


உன் பார்வையில் உள்ளதடா நெருப்பும்


உன் சுவாசத்தில் உள்ளதடா அனலும்


உன் சுண்டுவிரலில் சாயுமடா தடைகள்


உன் தோளில் உள்ளதடா வீரம்


பெரும் புயலுக்கு ஒப்பானதடா உனது கோபம்


பெரும்படையும் சிதறுமடா அதைக் கண்டு


இந்த வையகத்தில் நமக்கு நிகர் நாமே


இந்த உலகத்தின் மூத்த குடியே !!!!!


நம்புங்கள்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் .

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

பாரில் தமிழ் மண் வீரம் படைக்கும் .

பகைவன் ஓடும் செய்தி கிடைக்கும்.

போரில் வெற்றி முரசு முழங்கும்.

புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்..


புது சரித்திரம்  தமிழினம் படைக்கும் .

என் தமிழன்னையின் புகழ் ஓங்கும் .

அதில்  என் மனம் மயங்கும் .

இது  நடக்கும் வரை என் இதயம் நில்லாது இயங்கும்.

நம்பிக்கை

பாறைகளின் இடுக்குகளின் 
முளைத்திருப்பது தாவரங்கள் அல்ல --------------தன்னம்பிக்கை 

தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல ----------உழைப்பு

கூட்டைப் பிளந்து வெளியே
வருவது குஞ்சுகளல்ல ---------------------------விடாமுயற்சி



செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இறைவன்

தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச் செல்வான் ஒருவன் — அவன்தான்
நாடகத்தை ஆட வைக்கும் இறைவன்....... கண்ணதாசன்.


பதறாமல் செய்யும் காரியம் சிதறாது..


"இது புத்தர் வாழ்கையில் நடந்தது .
ஒரு முறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு கிராமத்தை கடந்து கொண்டிருந்தார்கள் .அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம் .ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார்.அவன் தண்ணீர் எடுத்து வர அருகிலுள்ள குளத்துக்கு ஓடினான் .அங்கே குளக்கரையில் கிராமத்து வாசிகள் துணி துவைத்து  கொண்டிருந்தார்கள்.அதனால் குளம் கலங்கி இருந்தது,அதிலிருந்து தண்ணீர் எடுத்து போய் கொடுக்க சீடனுக்கு மனமில்லை.ஓடி வந்து புத்தரிடம் பார்த்ததை சொன்னான்.உடனே புத்தர் 'பரவாயில்லை சிறிது நேரம் கழித்து போய் எடுத்து கொள்ளலாம் ' என்று சொல்லி அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும் ,புத்தர் சீடனை அழைத்து மீண்டும் குளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வர சொன்னார்.சீடனும் குளத்துக்கு சென்றான்,குளக்கரை காலியாக இருந்தது,கிராமத்து வாசிகள் துவைத்து முடித்து சென்றிருந்தார்கள் .குளத்தில் கலங்கலும் அடங்கி தண்ணீர் தெளிந்து இருந்தது.சீடன் தெளிந்த தண்ணீரை எடுத்து கொண்டு புத்தரிடம் சென்றான்.
"ஒரு மணி நேரம் முன்பு பார்த்த குளம் போலவே இல்லை,மிகவும் தெளிந்து இருந்தது " என்றான் குருவிடம்.அதற்கு புத்தர் அவனிடம் ,
"மனித மனமும் இப்படித்தான் ,பதட்டத்தில் இருக்கும் பொழுது கலங்கியிருக்கும் .அந்த நேரம் நாம் எந்தக் காரியமும் செய்ய கூடாது.சிறிது நேரம் அமைதியாக இருந்தால் மனம் தெளிவடையும்.அப்பொழுதுதான் நம் பணிகளை செய்ய வேண்டும்" என்றார்..  

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது..