எழுத்துகளை கோர்த்து
வார்த்தையை முன்னிறுத்தி
இயன்றவரை
இருதயத்தில் உள் நுழைந்து
மெய்யுரைக்கும் எனது எழுத்து...
இன்னும்
கன்னித் தமிழில் கரை சேரவில்லை..
ஆகவே
கவிஞன் என்றுரைக்க மனமில்லை..
எனினும்
ஆர்வத்தில் குறைவில்லை...
முடித்தது
பள்ளிப் படிப்பை பாதியிலே..
ஆதலால்
இலக்கணம் இல்லாமலே என் எழுத்து...
கூடியவரை
நிகழாது எழுத்தில் கருத்துப் பிழை...
என்றும் எண்ணம்
மொழியையே நினைந்திருக்கும்..
கவனம்
இனத்தையே சார்ந்திருக்கும்...
சுற்றம்
எடுத்துரைப்பேன் அச்சம் அகற்றி...
இன்றும் என்றும்
எனக்குண்டான தேடலோடு நானும் எழுதுகிறேன் ...