தர்மம் தலைகவிழ்ந்து
வீழ்ந்துத்தான் போகுமா...
அறம் செய இலார்
துர்காரியம் செயவே
பெரும் பேரிடர் நிகழ்த்தவே
அதர்மம் சிரம் உயர்த்தும்
அப்பேரிடரில் வீழும் தர்மம்...
தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும்;
நிலையான செயலொன்று இலவே
அதையொற்றி அதர்மத்தின்
வாழ்வும் நிலையானது இலவே;
நற்காரியம் புரிந்திடவே
'நல்லோரின் கரம் வலுக்கும்'
சமயமென்று தர்மம்
சிரம் நிமிரும் மீண்டும்;
தருமம் மீண்டும் அதனை வெல்லும்
கயவர்களின் கயமை அகலும்....