என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 12 டிசம்பர், 2013

எம் தேவன் !

பதினாறு பரி 

பூட்டி; முலாமிட்ட


தேரேறி ; நகைத்த


முகம் கொண்டு 


வருவான் 


எம் தேவன் !

காலனையும் அவன்


வடம் பிடிப்பான்;


என்னையும் அவன் 


தடம் பிடிப்பான்; 


என் குலம் காக்க


வந்த எம் அய்யனே ! 


நித்தம் பித்தனாய்


சித்தம் கொள்வேன் !


வாழ்வும் வளமும் 


இனி உன் வசமே தேவா !!!



என் காதல் !

என் மொழி

மீதான காதல் ! 

என் சுயநிலையை 

பதப்படுத்தும்...

என் அவளின்

மீதான காதல் ! 

என் வாழ்நிலையை

மிதப்படுத்தும்... 

இரண்டுமே என்னை 

நிலைப்படுத்தும்.

ஆள நினைக்கிறாயா !

என்னை 

ஆள நினைக்கிறாயா !

அன்பெனும் ஆயுதம் தறித்து வா,

அடக்க நினைக்கிறாயா !

வீரமெனும் வில்லை வளைத்து வா,

எனை ஆள்வதற்கும், 

அடக்குவதற்கும்

வெற்றிக் கொள்வது அவசியம்.

என்னடா வருத்தம் !

சுழியம் முதல்

ஒன்பது வரைதானே

எண்கள்,

அதை சுற்றித்தானே

லட்சங்களும்,

கோடிகளும்.

பிறகு என்னடா !

வருத்தம் உன்னை

சுற்றித்தானே உலகம்,

உன்னையே முன்னும்

பின்னும் திருப்பி

போடு நண்பா !

உன்னையறியும் உலகம்.