என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 12 நவம்பர், 2011

தன்மான தலைவா !!!

தன்மான தலைவா !!!

தலைவா ! எம் தலை சாயும் வரை உனையன்றி யாதொருவரையும் ஏற்க மாட்டேன் தலைவனென்று !!

தலைவா ! நீ பிறந்த கார்த்திகை மாதம்தான் தமிழர்களின் தன்மான மாதமாக ஏற்போம் சபதமென்று !!

தலைவா ! வானில் பறவை பறக்க கூடவே தமிழனின் மானமும் பறக்க ! கொடியில் புலியை பறக்க செய்த உனக்கு நன்றிகள் நிறைவன்று  !!

தலைவா ! பூலிதேவனையும் கண்டதில்லை ,வங்கத்து சிங்கத்தையும் கண்டதில்லை !உன்னை கண்டோமே இந்நூற்றாண்டு கண்ட மாவீரன் என்று !!

தலைவா ! நீ மாண்டு போனதாய் மடையர்கள் மகிழ ! அந்த விலைமகளின் மகன்களுக்கு தெரியாது போலும் மரணிக்க நீ மனிதனன்று!!

தலைவா ! தமிழ்தேசம் கொண்ட மாசற்ற தங்கமே !தரணியில் உன்னை போல் வேறொருவன்  இல்லை! வந்து விடு உனையன்றி வேறு கதியன்று !!

தலைவா ! சத்திரியனுக்கு சாவில்லை !மாவீரம் மறைவதும் இல்லை ! சட்டென்று வந்து விடு தலைவா !உலகுக்கு உரைப்போம் நாம் யாரென்று !!